தேசிய செய்திகள்

பெங்களூருவில் 165 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு- மந்திரி சுதாகர் தகவல்

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் கொரோனாவுடன், ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், பெங்களூருவில் கொரோனா பரவல் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் ஒரே நாளில் புதிதாக 165 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பெங்களூருவில் புதிதாக 165 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை 931 ஆக உயர்ந்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு