தேசிய செய்திகள்

கருணாநிதி நினைவு தினம்: டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மரியாதை..!

கலைஞர் நினைவு நினைவு தினத்தையொட்டி டெல்லியில் அவரது படத்திற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவினர் அமைதி பேரணி நடத்தினர். இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டேர் பங்கேற்றனர்.

பேரணி நிறைவில் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டேர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், கருணாநிதி நினைவு தினத்தையொட்டி டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது திமுக எம்.பி. திருச்சி சிவா உடனிருந்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்