தேசிய செய்திகள்

காஷ்மீர்: விபத்தில் 8 பேர் உயிரிழப்பு; பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு

காஷ்மீரில் சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்து உள்ளார்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் தத்ரி பகுதியில் இருந்து தோடா நோக்கி சிற்றுந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், சிற்றுந்து திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 12 பேர் காயமடைந்து உள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என தோடா மாவட்ட கூடுதல் எஸ்.பி. கூறியுள்ளார்.

இந்த நிலையில், சிற்றுந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். காயமடைந்த நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு