தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லை: பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் மேலும் ஒரு இந்திய வீரர் பலி

காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் மேலும் ஒரு இந்திய வீரர் பலியானார்.

தினத்தந்தி

ஜம்மு,

காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எனவே எல்லையில் இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இருப்பினும் காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் நேற்று இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் அதே மாவட்டத்துக்கு உட்பட்ட நவுசாரா செக்டர் கலல் என்ற இடத்தில் இன்று பாகிஸ்தான் வீரர்கள், இந்திய வீரர்கள் மீது மீண்டும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இந்திய வீரர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இந்தியா தரப்பில் பாகிஸ்தான் வீரர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்