தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்ட்டர்; பயங்கரவாத இயக்க முக்கிய தளபதி சுட்டு கொலை

காஷ்மீரில் ஹர்கத்-உல்-முஜாகிதீன் பயங்கரவாத இயக்க முக்கிய தளபதி உள்பட 3 பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

குல்காம்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், ஹர்கத்-உல்-முஜாகிதீன் என்ற பயங்கரவாத இயக்கத்தின் மாவட்ட தளபதியாக இருந்த ஷாகீர் நசார் என்பவர் சுட்டு கொல்லப்பட்டார்.

அவருடன் மற்ற இரு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். கடந்த 2018ம் ஆண்டு முதல் நசார் தீவிரமுடன் செயல்பட்டு வந்துள்ளார். நசாரை என்கவுண்ட்டரில் வீழ்த்தியது மிக பெரிய வெற்றி என காஷ்மீர் ஐ.ஜி.பி. விஜய் குமார் இன்று தெரிவித்து உள்ளார்.

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று நடந்த 2 என்கவுண்ட்டரில் டி.ஆர்.எப். என்ற பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி உள்பட 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு