தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்ட்டர்; அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீர் என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதியை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு கொன்றனர்.

தினத்தந்தி

ஜம்மு,

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து சி.ஆர்.பி.எப். படை மற்றும் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

இதில், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து வீரர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதியை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு கொன்றனர். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்