தேசிய செய்திகள்

காஷ்மீர்: பாதுகாப்பு படை, பயங்கரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஹான்ஜின் ராஜ்போரா பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுடன் காஷ்மீர் மண்டல போலீசாரும் கூட்டாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இரவில் கடுமையான துப்பாக்கி சண்டை தொடங்கி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.