தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இந்தியா பதிலடி

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்தி வரும் துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் காரி கர்மாரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி அத்துமீறி நேற்றிரவு 7.45 மணியளவில் தாக்குதலில் ஈடுபட்டது. இந்திய பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் மன்கோட் பிரிவில் இன்று காலை 6.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதலை தொடர்ந்து உள்ளது. அவர்களது துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்