தேசிய செய்திகள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு: தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை?

பி.ஆர்.எஸ் தலைவர் கே சந்திரசேகர் ராவின் ஹாட்ரிக் வெற்றியை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் பி.ஆர்.எஸ் தலைவர் கே சந்திரசேகர் ராவின் ஹாட்ரிக் வெற்றியை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். அதேநேரம் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளதால் தெலுங்கானாவில் முக்கோணப் போட்டி நிலவுகிறது.

தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 இடங்களில் பி.ஆர்.எஸ் 58,காங்கிரஸ் 56, பாஜக 10 இடங்களை பெறலாம் என சி.என்.என்ற செய்தி நிறுவனம் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ் 40-55, காங்கிரஸ் 48-64, பாஜக 7-13 இடங்களை பெறலாம் என ஜன் கீ பாத் என்ற செய்தி நிறுவனம் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் 49 -59, பி.ஆர்.எஸ் 48-58, பாஜக 5-10 மற்றவை 6-8 இடங்களை பெறலாம் என டிவி9 என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்