தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் 3வது முறையாக தேர்வு

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 3வது முறையாக இந்த பதவிக்கு தேர்வாகி உள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அக்கட்சியில், ஒருவர் 2 முறைக்கும் கூடுதலாக ஒரு பதவியை வகிப்பதற்கான சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதேபோன்று, 2 முறை தேசிய செயலாளராக பதவி வகித்த பங்கஜ் குப்தா மீண்டும் அந்த பதவிக்கு இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு