தேசிய செய்திகள்

கேரளா : கொச்சி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து..! "உயிர் சேதம் இல்லை" - கடலோர காவல்படை விளக்கம்

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிர் சேதம் இல்லை என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது

தினத்தந்தி

கொச்சி,

கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சோதனையின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அவசரமாக தரையிறக்கப்பட்டதில் ஹெலிகாப்டர் ஓடுபாதைக்கு வெளியே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளதகாவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிர் சேதம் இல்லை என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.விபத்துக்கான காரணத்தை விசாரிக்க விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்