கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கேரளாவில் புதிதாக 5,080 பேருக்கு கொரோனா: மேலும் 196 பேர் பலி

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,080 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,080 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 89 ஆயிரத்து 175 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு மேலும் 196 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,495 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7,908 ஆக உள்ளது. இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 50,04,786 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 53,892 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 58,088 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு