தேசிய செய்திகள்

கேரள வெள்ள நிவாரணம்: இந்திய விமானப்படை ரூ.20 கோடி நிதி உதவி

கேரளாவுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.20 கோடி நிதி உதவி, இந்திய விமானப்படை மூலம் வழங்கப்பட்டது. #KeralaFlood

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட வரலாறு காணாத சேதத்தை அடுத்து, அதனை தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்ட இயற்கை பேரழிவை கருத்தில் கொண்டு தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறி இருந்தது.

கேரளாவில் வெள்ள பாதிப்பினை அடுத்து மழைநீர் வடிய தொடங்கிய நிலையில், அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மழை, வெள்ளம் பாதித்த கேரள மாநிலத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து நிதி உதவி குவிந்து வருகிறது.

அந்த வகையில் கேரள மாநிலத்துக்கு உதவும் வகையில் முதல்மந்திரி நிவாரண நிதிக்கு இந்திய விமானப்படை மனம் உவந்து ரூ.20 கோடி நிதி அறிவித்தது.

கேரள முதல்மந்திரி பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தென்பிராந்திய விமானப்படை தளபதி பி. சுரேஷ் சந்தித்து ரூ.20 கோடி நிதியை வழங்கினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்