கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

கேரளா: காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்ட செவிலியர் பணிநீக்கம்

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்ட செவிலியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கொச்சி,

கேரள மாநிலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சையளிக்க குழந்தையின் பெற்றோர் எர்ணாகுளம் அருகே அங்கமல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, அந்த குழந்தைக்கு செவிலியர் ஒருவர் தவறுதலாக ரேபிஸ் தடுப்பூசியை போட்டுள்ளார். மற்றொரு குழந்தைக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு பதிலாக, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு செவிலியர் ரேபிஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளார்.

ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட அம்மாநில சுகாதாரத் துறை, மருத்துவமனையில் தவறுதலாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திய செவிலியரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்தது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...