தேசிய செய்திகள்

அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கொல்கத்தா போலீசார் சம்மன்

ஆசிரியர் வேலைவாய்ப்பு பண மோசடி வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக கொல்கத்தா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் ஆசிரியர் வேலைவாய்ப்பு பண மோசடி வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக கொல்கத்தா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தனியார் நிறுவனத்தில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் முறைகேடாக ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு கொல்கத்தாவில் உள்ள குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் அலுவலக ஊழியர் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, அலுவலக கணினிகளில் ஒன்றில் வெளிப்புற கோப்பு பதிவிறக்கம் வடிவில் "ஆதாரங்களை பதிவிறக்கம்" செய்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்