தேசிய செய்திகள்

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 9-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெட்லியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று பிற்பகல், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மருத்துவமனை சென்று அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இரவு 11.15 மணியளவில், அமித்ஷா, உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் மருத்துவமனை சென்று உடல் நலம் விசாரித்தனர்.

அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், ஐசியூவில் , மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு பிறகு அருண் ஜெட்லியின் உடல் நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை. ஏற்கனவே, கடந்த மே மாதமும் அருண் ஜெட்லி, உடல் நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வழக்கறிஞரான அருண் ஜெட்லி, மோடியின் முதலாவது அரசில் முக்கிய இலாக்காக்களை கவனித்து வந்தார். உடல்நலம் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை அருண் ஜெட்லி செய்து கொண்டார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு