தேசிய செய்திகள்

ஹரித்துவார் கும்பமேளாவில் கலந்து கொண்ட 13 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு

ஹரித்துவார் கும்பமேளாவில் கலந்து கொண்ட 13 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்லும்போது கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

தினத்தந்தி

ஹரித்துவார்

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் உச்சபட்சமாக 1,953 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் டேராடூனில் 796 பேர், ஹரித்துவாரில் 525 பேர், நைனிடாலில் 205 பேர், உதம் சிங் நகரில் 118 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உத்தரகாண்டில் நடந்துவரும் கும்பமேளாவில் 3-வது சாஹி புனித நீராடுதலில் நேற்று ஒரே நாளில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

ஹரித்வாரில் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா வரும் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கும்பமேளாவில் பங்கேற்று கங்கை நதியில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கானவர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இங்கே வருபவர்கள் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டியது கட்டாயம்.

அதே வேளையில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது, முக கவசம் அணிவது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. எனினும் அளவுக்கதிகமாக பக்தர்கள் குவிவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன் 2010-ம் ஆண்டு நடந்த கும்பமேளாவில், மேஷ சங்கராந்தி நாளில் புனித நீராடுதல் நிகழ்வுக்கு 1.60 கோடி பேர் ஹரித்துவாரில் பங்கேற்ற நிலையில் அதைவிட நேற்று குறைவுதான். பக்தர்களுக்கும், சாதுக்களுக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்தனர்.

இதில் 500 மாதிரிகளுக்கு 20 மாதிரிகளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சாதுக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 4 சதவீதம் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சாதுக்களை கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் அழைத்தபோது பெரும்பாலானோர் வர மறுத்துவிட்டனர்.

இதனிடையே 2 நாட்களில் கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கும்பமேளா நடைபெறும் பகுதியில் மட்டும் நாளொன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த புனித நீராடாலுக்குச் சென்று வந்த மக்கள் மீண்டும் சொந்த மாநிலங்களுக்குச் செல்லும்போது கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு