தேசிய செய்திகள்

'நாடு முழுவதும் நடக்கும் ரெயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு?'லாலு பிரசாத் யாதவ் கேள்வி

மேற்குவங்காளத்தில் ரெயில்கள் மோதியதில் 9 பேர் பலியாகினர். 41 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

பாட்னா,

மேற்குவங்காளத்தின் ஜல்பாய்குரியில் பயணிகள் ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விபத்துக்கு மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

அந்த வகையில் பீகார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் ரெயில்வே மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் இந்த விபத்து தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "நாடு முழுவதும் நிகழும் ரெயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்