கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லை - மத்திய சட்ட மந்திரி கருத்து

மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லை என்று மத்திய சட்ட மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் கருத்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

சமீபத்தில், மத்திய சட்ட மந்திரியாக நியமிக்கப்பட்ட அர்ஜூன்ராம் மேக்வால், அரசுமுறை பயணமாக மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு சென்றார். அவரிடம், அம்மாநிலத்தில் உள்ள புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அர்ஜூன்ராம் மேக்வால் கூறியதாவது:-

மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு அவ்வளவாக சரியாக இல்லை என்று கருதுகிறேன். முதலில் அதுபற்றி ஆய்வு செய்து விட்டு, பிறகு விரிவாக பேசுகிறேன். டெல்லியில் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான அவசர சட்டத்த அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் கொண்டு வந்துள்ளோம். அதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் சய்ய வேண்டி இருப்பதால், அங்கு அதுபற்றி விவாதிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை