தேசிய செய்திகள்

'2024-ல் மோடி அரசிடம் இருந்து மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வோம்' - மல்லிகார்ஜுன கார்கே

அமிர்த காலத்தை விட தற்போது கல்வியின் காலமே இந்தியாவிற்கு தேவை என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

2024-ம் ஆண்டில் மோடி அரசிடம் இருந்து மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வோம் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆண்டு கல்வி அறிக்கையின்படி, 14 முதல் 18 வயது வரை உள்ள கிராமப்புற மாணவர்களில் 56.70% பேருக்கு மூன்றாம் வகுப்பு கணக்குகளைப் போட முடிவதில்லை. 26.50% பேருக்கு தங்கள் தாய்மொழியில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை சரளமாக படிக்க முடிவதில்லை. 17 வயது முதல் 18 வயது வரை உள்ள இளைஞர்களில் 25% பேர் ஆர்வமின்மை காரணமாக கல்வி கற்பதை நிறுத்திவிடுகிறார்கள். 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தினசரி பயன்பாட்டில் உள்ள கணக்குகளைக் கூட போட முடிவதில்லை.

பெரும்பாலான கற்றல் குறியீடுகள் கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு முந்தைய காலத்தைவிட மோசமாக உள்ளது. அமிர்த காலத்தை விட தற்போது கல்வியின் காலமே இந்தியாவிற்கு தேவையானதாகும். 2024-ம் ஆண்டில் மோடி அரசிடம் இருந்து மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வோம்."

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்