தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு - எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகாவில் அமலில் உள்ள ஊரடங்கு வருகிற 14-ந் தேதி வரை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று அறிவித்தார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் கடந்த மே மாதம் 11-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகும் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால், கடந்த மாதம் 24-ந் தேதி முதல் வருகிற 7-ந் தேதி காலை 6 மணி வரை மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு வருகிற 7-ந் தேதி காலை நிறைவடைகிறது.

கர்நாடகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு விகிதம் 12 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நிபுணர் குழு, கர்நாடகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி வருகிற 7-ந் தேதி காலை 6 மணி முதல் 14-ந் தேதி காலை 6 மணி வரை மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை