தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் வரும் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் வருகின்ற 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக மே 16-ந்தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. வரும் 15-ந்தேதியுடன் முடிய இருந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்டு 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார்.

கொரோனா நிலைமை மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இருந்தாலும் 3-வது அலையின் ஆபத்து இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உள்ளூர் ரெயில்களை நாங்கள் அனுமதிக்காததற்கு இதுவும் ஒரு காரணம் என்று செய்தியாளர் சந்திப்பில் மம்தா கூறினார்.

மாநிலத்திற்கு தேவையான அளவு தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. மக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் ஊசி செலுத்தப்பட்டால்தான், ரெயில்களை அனுமதிக்க முடியும் என்றும் மம்தா குறிப்பிட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்