தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மாநிலங்களவை இரவு 7 மணி வரை ஒத்திவைப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை இரவு 7 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜனாதிபதி உரையுடன் இந்திய நாடாளுமன்றம் கடந்த 29-ந்தேதி கூடியது. பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இரு அவைகளிலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களவையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 5 மணி வரை சபாநாயகர் சபையை ஒத்திவைத்தார். அதன்பின் சபை மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சிகள் சபையில் தொடர்ந்து முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.. இதனால் மாநிலங்களவை இரவு 7 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்