தேசிய செய்திகள்

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் சாவு

குந்தாப்புராவில் லாரி -மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.

உடுப்பி;

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அருகே ஹெலகேரி கிராமத்தை சேர்ந்தவர் சதீஸ் ஜோகி (வயது 42). இவர் தனது சகோதரர் ஆகாஸ் ஜோகியுடன் மோட்டார் சைக்கிளில் தள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த லாரி அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சதீஸ் ஜோகி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், ஆகாஸ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு நெடுஞ்சாலை போலீசார் வந்தனர். அவர்கள் விபத்தில் இறந்த சதீசின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்