தேசிய செய்திகள்

"பெற்றோரின் அன்பை விட காதல் வலிமையானது" - கர்நாடக ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு

பெற்றோர், குடும்ப உறுப்பினர்களிடம் கிடைக்கும் அன்பைக் காட்டிலும் காதல் வலிமையானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக ஐகோர்ட்டில் நாகராஜு என்பவர் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கல்லூரியில் தங்கி படித்து வந்த தனது மகள் நிசர்காவை காணவில்லை என்றும், ட்ரைவராக இருந்த நிகில் என்பவர் தனது மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து போலீசாரின் உதவியுடன் நிசர்கா மற்றும் நிகில், இருவரும் நீதிபதிகள் முன்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையின் போது நிசர்கா, தான் மேஜர் என்றும் விருப்பப்பட்டு நிகிலை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது பெற்றோர், குடும்ப உறுப்பினர்களிடம் கிடைக்கும் அன்பைக் காட்டிலும் காதல் வலிமையானது என்று தெரிவித்த நீதிபதிகள், நிசர்கா தனது காதல் கணவர் நிகிலுடன் சேர்ந்து வாழ அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தனர். 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு