தேசிய செய்திகள்

தண்ணீர் பிரச்சினை குறித்த கருத்து: கிரண்பேடி வருத்தம் தெரிவித்ததாக மக்களவையில் ராஜ்நாத் சிங் தகவல்

தண்ணீர் பிரச்சினையில் தமிழக மக்கள் குறித்த கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்ததாக மக்களவையில் ராஜ்நாத் சிங் தகவல் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி

மக்களவையில் பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, புதுச்சேரி கவர்னர் ஒரு ட்விட்டில் தமிழக மக்களையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் கேலி செய்துள்ளார். அரசாங்கம் அவரது கருத்தை ஒப்புக்கொண்டால், அது அவரை ஆதரிக்கிறது என்று அர்த்தம். நான் பதிலளிக்க அவையின் துணைத் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அந்த ட்விட்டை கவனித்தது. இதற்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

'எழுதப்பட்டவை எனது தனிப்பட்டதாக இருந்தன, இருப்பினும் இது தவிர்க்கக்கூடியது என்று நான் ஒப்புக்கொள்கிறேன். தமிழக மக்களைப் பற்றி எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என கிரண் பேடி தெரிவித்து உள்ளார் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு