தேசிய செய்திகள்

கிரிக்கெட் உலகில் ராஞ்சியை பிரபலமான நகரமாக்கி விட்டார் டோனி - ஜனாதிபதி

கிரிக்கெட் உலகில் ராஞ்சி நகரை பிரபலமானதாக டோனி மாற்றிவிட்டார் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

தினத்தந்தி

ராஞ்சி,

ராஞ்சி பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியதாவது:- எம்.எஸ். டோனியை நேற்று ராஜ்பவனில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மிகவும் திறமை மிக்கவர் என்பதால், டோனி மீது மக்கள் அன்பு செலுத்துகின்றனர் என்றார்.

மேலும் ஜார்க்கண்ட், கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமான நகரமாக டோனியால் மாறிவிட்டது என்றார்.

அதேபோல், வில்வித்தையில் சாதனை படைத்த தீபிகா குமாரி மற்றும் 1928 ஆம் ஆண்டு ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற ஹாக்கி அணியின் கேப்டன் ஜெய்பால் சிங் முண்டா ஆகியோரின் சாதனைகளையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு