தேசிய செய்திகள்

இந்தியாவில் உருவாக்கப்பட்ட காசநோய் பரிசோதனை விரைவில் அறிமுகம்- மத்திய சுகாதார மந்திரி

டெல்லியில், காசநோய் தடுப்பு ஆலோசனை கூட்டத்தில், மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

தினத்தந்தி

அதில் அவர் பேசியதாவது:-

காசநோய்க்கு எதிராக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை பயன்படுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

காசநோயை கண்டறியும் தோல் பரிசோதனை ஒன்றை இந்தியா உருவாக்கி உள்ளது. 'சி-டிபி' என்று அழைக்கப்படும் இச்சோதனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இச்சோதனை, இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படும்.

காசநோய் அதிகம் உள்ள நாடுகளுக்கு இந்த பரிசோதனை கருவி பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், காசநோய் பாதித்தவர்களை தத்தெடுக்க கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கும் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்