தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம்: பா.ஜனதாவுக்கு 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி -சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

மத்திய பிரதேசத்தில், பா.ஜனதா 200 தொகுதிகளுக்கு மேல் எளிதில் வெற்றிபெறும் என சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டாடியா,

மத்திய பிரசேதத்தில் பா.ஜனதா மிக சுலபமாக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 3 முறையாக பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார். தொடர்ந்து 4-வது முறையாக பா.ஜனதா ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

ஆனால், தொடர்ந்து 15 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சியில் அக்கட்சிக்கு எதிரான அலைகளே எழுந்துள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகளும் பா.ஜனதாவுக்கு சாதகமாக இல்லை என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெறுமா அல்லது காங்கிரஸ் வெற்றி பெறுமா என்ற கருத்துக்கணிப்புகள் இடையே வேறுபாடுகள் நிலவுகிற நிலையில், உறுதியாக எந்த நிறுவனமும் கணிப்பை தெளிவாக சொல்லவில்லை.

இந்நிலையில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியான பின்னர் முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்கள் சந்திப்பில், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக உள்ளனர். நீண்ட நாட்களாக பெதுமக்களுடன் தொடர்பில் உள்ளேன். அனைத்து தரப்பு மக்களின் ஆசி எங்களுக்கு உள்ளது. அதனால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினமாக இருக்காது. எளிதில் 200 தெகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுவிடுவேம் என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு