தேசிய செய்திகள்

ஆடையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய பெண் போலீஸ் - வைரலாகும் வீடியோ

அழுக்காக்கிய நபரை பேண்டை துடைக்குமாறு பெண் போலீஸ் கட்டாயப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் பைக்கில் பின்னோக்கிச் செல்ல முயன்றபோது, பெண் போலீஸ் ஒருவரின் பேண்டில் சேறு கறை ஏற்பட்டதால் அந்த நபரை பெண் போலீஸ் சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளியாகி உள்ள 6 விநாடி வீடியோவில் அந்த நபர் பெண் போலீஸ் மீது சேற்றை தெளிக்கும் காட்சிகள் இல்லை. அந்த வீடியோவில் அந்த நபர் பெண் போலீசின் பேண்டில் ஏற்பட்ட கறையை சிவப்பு துணி ஒன்று கொண்டு துடைக்கிறார். அதன்பின் அந்த பெண் போலீஸ் அந்த நபரை அறைந்துவிட்டு செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அந்த வீடியோவில் பெண் போலீசின் முகம் தெரியவில்லை. அவர் வெள்ளைத்துணியால் முகத்தை மூடியிருந்தார். தற்போது அந்த பெண் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் சாஷி கலா என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ரேவா பகுதியின் எஸ்.பி சிவ் குமார், 'நாங்கள் அந்த வீடியோவை பார்த்தோம். இதுகுறித்து யாராவது புகாரளித்தால் அந்த பெண் போலீசின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு