தேசிய செய்திகள்

மராட்டியம்: பசுமை துறைமுகம் அமைக்க ரூ.76,220 கோடி ஒதுக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்

மராட்டியத்தில் வாதவன் பகுதியில் அமையவுள்ள பெரிய துறைமுகம், நேரடி மற்றும் மறைமுக அடிப்படையில் 10 லட்சம் தனிநபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் தஹானு பகுதியருகே வாதவன் பகுதியில் ஒரு பெரிய துறைமுகம் அமைப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து தட்பவெப்ப சூழ்நிலையிலும், செயல்பட கூடிய, பசுமையான, பெரிய அளவிலான துறைமுகங்களில் ஒன்றாக உருவாக்கப்படும்.

இதுபற்றி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழிதடத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இந்த துறைமுகம் இருக்கும். உலக அளவில் டாப் 10 துறைமுகங்களில் ஒன்றாக இது இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் உள்பட மொத்த திட்ட நிதியானது ரூ.76 ஆயிரத்து 220 கோடியாக இருக்கும் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், 10 லட்சம் தனிநபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக அடிப்படையில் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து