மும்பை,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் மராட்டியத்தில் இன்று மேலும் 2,560 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,860 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் வைரஸ் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,587 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 996 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,329 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.