தேசிய செய்திகள்

பராமரிப்பு பணி: பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து - தெற்கு ரெயில்வே தகவல்

பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் காயங்குளம்-திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் மண்டல தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொல்லம் மாவட்டம், சாஸ்தாம்கோட்டை - பெரிநாடு இடையே ரெயில் பாலம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், ரெயில் போக்குவரத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, 28-ந் தேதி புறப்படும் பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண். 06792) காயங்குளம் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது. அதுபோல், 25-ந் தேதி புறப்படும் சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண். 06127), கொல்லம் - குருவாயூர் இடையே ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்