தேசிய செய்திகள்

நாட்டில் பெரும்பாலானோருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை - ராகுல்காந்தி

நாட்டில் பெரும்பாலானோருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்று ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசின் தடுப்பூசி திட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, நாட்டில் பெரும்பாலானோருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டில் பெரும்பாலானோருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு எப்போது தொடங்கப்போகிறது?.

தற்போதைய தடுப்பூசி செலுத்தும் பணிகளின் வேகம் இப்படியே தொடர்ந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த மக்கள் தொகையில் 42 சதவிகிதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படலாம். கொரோனாவின் 3-வது அலையை தடுக்க வேண்டுமானால் மொத்த மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

அந்த இலக்கை அடைய தினமும் சராசரியாக 6 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால், கடந்த 7 நாட்களில் தினமும் சராசரியாக 58 லட்சத்து பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது இலக்கை விட 5 கோடியே 52 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் குறைவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்