தேசிய செய்திகள்

சபரிமலையில் மகரவிளக்கு ஏற்பாடுகள் தீவிரம்; பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரம் போலீசார் குவிப்பு

இடுக்கியில் மகரஜோதி தெரியும் இடங்களில் 1,400 போலீசார் குவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

சந்நிதானம், பம்பை, நிலக்கல் பகுதிகளில் 3 எஸ்.பி.க்கள் தலைமையில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மகரவிளக்கு தினத்தன்று போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடுக்கியில் மகரஜோதி தெரியும் இடங்களில் 1,400 போலீசார் குவிக்கப்பட உள்ளனர். வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

SCROLL FOR NEXT