தேசிய செய்திகள்

வீடு, வீடாக பிரசாரம் செய்ய 1.5 லட்சம் குழுக்கள் - கேரளாவில் ஆளும் கட்சி அதிரடி

வீடு, வீடாக பிரசாரம் செய்ய 1.5 லட்சம் குழுக்களை அமைத்து கேரளாவில் ஆளும் கட்சி அதிரடி திட்டம் வகுத்துள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சியான இந்திய கம்யூனிஸ்டு வாக்குகளை அறுவடை செய்ய புதிய உத்திகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து பிரசாரம் செய்யும் வகையில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் தேர்தல் பிரசார குழுக்களை அக்கட்சி அமைத்துள்ளது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் சுமார் 100 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத்தினரை சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை