தேசிய செய்திகள்

மேற்குவங்காள முதல்மந்திரியாக மம்தா பானர்ஜி நாளை மறுநாள் பதவியேற்பு

மேற்குவங்காள முதல்மந்திரியாக மம்தா பானர்ஜி நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துள்ளது. நடந்து முடிந்த மேற்குவங்காள தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. சிபிம் கூட்டணி 1 தொகுதியையும், மற்றவை 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.

ஆட்சியை தக்க வைத்துள்ள மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்குவங்காள முதல்மந்திரி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், மேற்குவங்காள முதல்மந்திரியாக மம்தா பானர்ஜி எப்போது பதவியேற்பார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பதவியேற்பு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் பார்தா சாட்டர்ஜி கூறுகையில், மே 5-ம் தேதி (நாளை மறுநாள்) மம்தா பானர்ஜி மேற்குவங்காள முதல்மந்திரியாக பதவியேற்பார் என்றார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பதவியேற்பு விழா மிகவும் எளிமையான முறையில் நடைபெறும் என திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்