தேசிய செய்திகள்

சுவேந்து அதிகாரி வெற்றிக்கு எதிராக மம்தா தாக்கல் செய்த மனு மீது 24 ஆம் தேதி விசாரணை

நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து, மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கெண்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு, கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த மே மாதம் 2-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 210-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது.

சட்டப்பேரவைத் தேர்தலில், முதல் மந்திரியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, புர்பா மெட்னிபுர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் பேட்டியிட்டு தேல்வி அடைந்தார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் பேட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.

குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து, மம்தா பானர்ஜி கெல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று காலை நீதிபதி கவுசிக் சந்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மம்தா பானர்ஜி தரப்பு வழக்கறிஞர், மனு மீதான விசாரணையை ஒருவாரம் தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிபதி, இந்த மனு அடுத்த வாரம் வியாழக்கிழமைக்கு பட்டியலிடப்படட்டும். அதேவேளையில், மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு இணங்கி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என்பதை நீதிமன்ற பதிவாளர் உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்வார் எனறார். இதன்படி, இந்த மனு மீதான விசாரணை வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்