கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மாரத்தான் ஓட்டத்தின் போது சரிந்து விழுந்த நபர் உயிரிழப்பு

மராட்டியத்தில் மாரத்தான் ஓட்டத்தின் போது சரிந்து விழுந்த 32 வயது நபர் உயிரிழந்தார்.

தினத்தந்தி

சதாரா,

மேற்கு மராட்டியத்தில் உள்ள சதாரா நகரில் இன்று நடைபெற்ற அரை மாரத்தான் ஓட்டத்தின் போது சரிந்து விழுந்த 32 வயது நபர் உயிரிழந்தார்.

சதாரா ரன்னர் அறக்கட்டளை என்ற இலாப நோக்கற்ற அமைப்பு ஒன்று சதாரா ஹில் ஹாஃப் மராத்தான் (SHHM) ஓட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த 21 கிமீ மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட கோல்ஹாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ் படேல் என்பவர் ஓட்டத்தை நிறைவு செய்யும் நேரத்தில், இறுதி கோட்டிற்கு சில மீட்டர் தொலைவில் சரிந்து விழுந்தார்.

சரிந்து விழுந்த ராஜ் படேலை மாரத்தான் அமைப்பாளர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். போலீசார் இதுகுறித்து விபத்து மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து