கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

சத்தீஸ்கர்: ரூ.50 கோடி கேட்டு தொழிலதிபர் நவீன் ஜிண்டாலுக்கு மிரட்டல் கடிதம் - சிறை கைதி மீது வழக்குப்பதிவு

சத்தீஸ்கரில் ரூ.50 கோடி கேட்டு தொழிலதிபர் நவீன் ஜிண்டாலுக்கு மிரட்டல் கடிதம் விடுத்த சிறை கைதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ராய்கார்,

சத்தீஸ்கரின் ராய்கார் பகுதியில் பிரபல உருக்கு ஆலை நிறுவனமான ஜிண்டால் ஸ்டீல் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் நவீன் ஜிண்டாலுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் "ரூ.50 கோடி தர வேண்டும். 48 மணி நேரத்துக்குள் பணம் தராவிட்டால்..." என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் அந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யாரென்று விசாரணையில் இறங்கினர். அப்போது பிலாஸ்பூர் மத்திய சிறையில் இருந்து ஒரு கைதி அந்த கடிதத்தை அனுப்பியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கைதி மீது, கொலைமிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்