தேசிய செய்திகள்

டெல்லி வன்முறையின்போது துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஷாருக் என்பவர் கைது

டெல்லி வன்முறையின்போது போலீசாரை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஷாருக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த வாரம் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும், அதே இடத்தில் சட்டத்திற்கு ஆதரவாக போராட நடத்த வந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக வெடித்த நிலையில், வன்முறை சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

டெல்லி வன்முறையின் போது, ஜபார்பாத் பகுதியில் சிவப்பு நிற டி சர்ட் அணிந்திருந்த நபர் ஒருவர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டினார். சமூக வலைத்தளங்களிலும் இந்த புகைப்படங்கள் பரவின.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். போலீசார் விசாரணையில், தலைமறைவான அந்த நபர் பெயர் ஷாருக் என்பதும், அவர் உத்தரப்பிரதேசத்தில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில், ஷாம்லி மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஷாருக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்