தேசிய செய்திகள்

மண்டல, மகரவிளக்கு பூஜை நிறைவு: சபரிமலை அய்யப்பன் கோவில் நடையடைப்பு

மண்டல, மகரவிளக்கு பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து, சபரிமலை அய்யப்பன் கோவில் நடையடைக்கப்பட்டது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை, மகர ஜோதி தரிசனம் கடந்த 15-ந் தேதியும் நடந்தது. மண்டல, மகர விளக்கு பூஜைகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, தை மாத பூஜை வழிபாடுகள் நடந்து வந்தது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு பந்தளம் ராஜா குடும்ப பிரதிநிதி உத்ரம் திருநாள் பிரதீப்குமார் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்பட்டு, சாவி உத்ரம் திருநாள் பிரதீப்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்