மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நிலப் பிரச்சனை சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாத நிலையில் நீதிபதிகள் கோபம் அடைந்தனர்.
புதிய அரசு அமைந்து இத்தனை நாட்களாகியும் ஏன் இன்னும் அரசு தரப்பு வழக்கறிஞர்களை நியமிக்காமல் இருக்கிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அடுத்த தடவை அரசு தரப்பு வழக்கறிஞர் இல்லையென்றால் முந்தைய ஆட்சி காலத்தில் இருந்த அரசு வழக்கறிஞர்களை அழைத்து இந்த வழக்கின் விசாரணையை நடத்த வேண்டி இருக்கும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்