தேசிய செய்திகள்

மன்மோகன் சிங் விவகாரம்: காங்கிரஸ் அமளியால் மாநிலங்களவை 2 மணிவரை ஒத்திவைப்பு

காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட நிலையில் மாநிலங்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுடன் இணைந்து சதிதிட்டம் தீட்டுவதாக குற்றம் சாட்டினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் தொடர்புப்படுத்தி பேசியிருந்தார்.

இவ்விவகாரத்திற்கு காங்கிரஸ் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது, பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பாராளுமன்றத்திலும் காங்கிரஸ் இப்பிரச்சனையை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் முடங்கின. நேற்றும் மாநிலங்களவையில் இந்த பிரச்னை எழுப்பப்பட்டது. இதனால் நாளை வரை அவை ஒத்தி வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மாநிலங்களவை கூடியதும் காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு