தேசிய செய்திகள்

‘மன் கி பாத்’ நிகழ்ச்சி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரை

மனதின் குரல் என்ற நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களிடம் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

அதன்படி, இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. இது 86-வது மன் கி பாத் நிகழ்ச்சியாகும்.

இந்தியாவில் தற்போது குறைந்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் குறித்தும், ரஷியா-உக்ரைன் போர் மற்றும் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்