தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் - நவீன் பட்நாயக்

கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புவனேஷ்வர்,

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 603 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உயிரிழக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, நவீன் பட்நாயக் இன்று வீடியோ மூலம் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவ பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலே, அவர்களின் பணியை அவமதிக்கும் வகையிலே யாரேனும் செயல்பட்டால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரசுக்கு எதிராகப் போராடும் சுகாதார பணியாளர்கள் மற்றும் உதவியாக உள்ளவர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும். அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை கெளரவிக்கும் வகையில், அவர்களுக்கு விருதுகள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்