தேசிய செய்திகள்

கர்நாடக அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்

கர்நாடக அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

உடுப்பி,

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உடுப்பியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

உடுப்பி மணிப்பால் நிறுவனத்தில் 11 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் 900 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த நிறுவனமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தாலும் மரணங்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

கர்நாடகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கர்நாடகத்தில் புதிதாக 2,000 டாக்டர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்