தேசிய செய்திகள்

மேகதாது விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு முடிவெடுக்கும் வரை விவாதம் இல்லை - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்

மேகதாது விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு முடிவெடுக்கும் வரை விவாதம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மேகதாது அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுக்கும் வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதில் சீரான நிலைப்பாட்டை எடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் கருத்து, மத்திய அரசின் நிலைப்பாடு குறித்தும் இதனை தடுக்க மத்திய அரசின் செயல் திட்டம் என்ன என்றும் திமுக எம்பி வில்சன் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மாநிலங்களவையில் மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி பிஸ்வேஸ்வர் துடு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் மீதுள்ள மனுவில் சுப்ரீம் கோர்ட் முடிவு எடுக்கும் வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதில் சீரான நிலைப்பாட்டை எடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்