தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற ராகுலின் நியாய யாத்திரை

தேர்வு காரணமாக, மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற ராகுலின் நியாய யாத்திரையில் மைக் மற்றும் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தினத்தந்தி

பிர்பூம்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் முதல் மும்பை வரை 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' மேற்கொண்டு வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை, முர்சிதாபாத்தில் இருந்து பிர்பூம் மாவட்டத்திற்குச் செல்லும் வழியில் சில கட்டுப்பாடுகளுடன் இன்று காலை தொடங்கியது.

நியாய யாத்திரையானது, 20வது நாளான இன்று 2 மணி நேரம் தாமதமாக, முர்சிதாபாத்தில் உள்ள நபகிராமில் இருந்து காலை 10.30 மணிக்கு தொடங்கியது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து முர்சிதாபாத் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், " 10ஆம் வகுப்பு தேர்வு காரணமாக, மைக் மற்றும் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும், வி.ஐ.பி நெறிமுறையின்படி, போதுமான பாதுகாப்பு வசதியுடன் யாத்திரையை அதன் பாதையில் செல்ல அனுமதித்தோம்" என்று கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து