ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.